advertisement

தூத்துக்குடி: சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது

அக். 25, 2025 3:44 முற்பகல் |

 


அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் தலைமைப் பணியாளர் சுப.உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தங்களுடைய வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 500 நாட்களைத் தாண்டி அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி மக்களைக் கைது செய்து, அவர்களின் தலைவர் சங்கரநாராயணனை தனியாக அடைத்து வைத்திருக்கும் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

போராடும் மக்களின் முக்கியமான கோரிக்கையான தனியார் மீன் அரவை ஆலைகளை உடனடியாக மூட வேண்டும். சாலைப் போக்குவரத்து தொடர்பான அவர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். அமைதியாக அறவழியில் போராடும் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement