தவெக அரசுக்கு தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி
ஜூலை 20, 2026 4:39 முற்பகல் |
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





கருத்துக்கள்