advertisement

அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

மே 16, 2025 3:32 முற்பகல் |

 

எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் பகுதிக்கு சென்று விமானப்படை தளத்தில் பார்வையிட்டு வீரர்களுக்கு மத்தியில் சில விஷயங்களை பேசினார். அதில் பேசிய அவர் ” ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்தது. இந்த நடவடிக்கை நம்மளை பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் எனவும் நிரூபித்துள்ளது.

எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது.  தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுதான் பெரியது. இந்த மாதிரி கடினமான சூழலில் உங்களுடன் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் நான் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தாலும், முதலில் இந்திய குடிமகன் இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஒரு காலத்தில் பாகிஸ்தான் கடன் கேட்க சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றது, மறுபுறம், இன்று நமது நாடும் சர்வதேச நாணய நிதியம் ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி வழங்கும் நாடுகளின் பிரிவில் இருந்து வருகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அதைப்போல, போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இந்தியா செல்லும். பாகிஸ்தான் மிரட்டலுக்கு இந்தியா பயப்படாது ” எனவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement