பெங்களூரில் மாநகராட்சி குப்பை லாரியில் கிடந்த பையில் பெண் சடலம்
பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரியில் பெண் ஒருவரின் சடலம் பையில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் துாரத்தில், 'ஸ்கெட்டிங்' மைதானம் உள்ளது.
நேற்று இந்த மைதானத்தின் முன்பு மாநகராட்சி குப்பை லாரிஇரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இன்று அதிகாலை 03 மணி அளவில் லாரியை எடுப்பதற்காக டிரைவர் வந்துள்ளார். அப்போது லாரியின் குப்பை வாரும் இடத்தில் ஒரு பை கிடந்ததை பார்த்த அவர் அந்த பையை தூக்கியுள்ளார்.
பை வெயிட்டாக இருந்ததால் அவரால் துாக்க முடியவில்லை. அதனால் அவர் அதனை திறந்து பார்த்ததில் பெண்ணின் உடல் சடலமாக உள்ளதா பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிராசர் அங்கி பையில் கிடந்த பெண்ணின் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில், அதிகாலை 1 மணியளவில் லாரியின் அருகில் ஆட்டோ வந்து நின்றதும், ஆட்டோவில் இருந்து பெண்ணின் சடலம் இருந்த பையை ஒருவர் துாக்கி சென்று, குப்பை லாரியில் போடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால், அந்த நபரின் முகம் சரியாக தெரியவில்லை.
குறித்திய நபர் பெண்ணை வேறு எங்கேயோ கொலை செய்து, உடலை இங்கு வீசி சென்றதும் தெரிய வந்துள்ளது. இறந்து கிடந்த பெண் ஒரு நிறுவனத்தின் பெயரிலான டி - சர்ட், ன்ஸ் பேன்ட் அணிந்திருந்துள்ளார். அவர் உள்ளாடைகள் எதுவும் அணியாததால், அவரை மர்மநபர்கள் பலாத்காரம் செய்து கொன்று இருக்கலாம் என்றும், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த கோணத்திலும் விசாரணை நடக்கவுள்ளது.
கருத்துக்கள்