சென்னை :சாக்கு மூட்டையில் இளைஞர் சடலம்
சென்னை: பிஹார் இளைஞர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி, மகனும் கொலை செய்து வீசப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26-ம் தேதி அடையார், இந்திரா நகர், 1-வது அவென்யூ சாலையில் கிடந்த சாக்கு மூட்டையில் இளைஞர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் பைக்கில் வந்த 2 இளைஞர்கள் சாக்கு மூட்டையை வீசிச் சென்றது தெரிந்தது.
அதை அடிப்படையாக வைத்து விசாரித்தபோது கொலை செய்யப்பட்டது பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பது தெரிந்தது. மேலும் கொலையாளிகள் அதே மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (33), நரேந்திர குமார் (45), ரவிந்திரநாத் தாகூர் (45), விகாஷ் (24) உள்ளிட்ட 5 பேர் என்பதை கண்டறிந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய விசாரித்தனர்.
இதில் கவுரவ் குமார் மட்டுமல்லாமல் அவரது மனைவி முனிதா குமாரி (22) மற்றும் 2 வயது ஆண் குழந்தை பிர்மானி குமார் ஆகியோரையும் கொன்று, சாக்கு மூட்டையில் கட்டி மத்திய கைலாஷ் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசிச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.




கருத்துக்கள்