advertisement

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52 ஆயிரம் பேருக்கு சிக்கல் ! -பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜமாத் முக்கிய வேண்டுகோள்

ஏப். 15, 2025 7:57 முற்பகல் |

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52 ஆயிரம் பேருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால்  பிரதமர் மோடி தலையிட ஐக்கிய ஜமாத் வேண்டுகோள் வைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் எம். எஸ்.ஏ. ஷாஜகான். பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : தனியார் நிறுவனங்களின் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு இந்தியா முழுவதும் 52 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கட்டணத்தை மார்ச் 25ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில், இந்தியாவில் தனியார் ஹஜ் ஏஜென்சிகள் தங்களுக்கான கட்டணத்தை மத்திய ஹஜ் கமிட்டியிடம் செலுத்தி விட்ட நிலையில், 

மத்திய சிறுபான்மை நலத்துறையின் அலட்சியப் போக்கால் மத்திய ஹஜ் கமிட்டி உரிய நேரத்தில் மேற்கண்ட தொகையை சவுதி அரசாங்கத்திற்கு செலுத்தாத காரணத்தினால் 52 ஆயிரம் பேரும் இந்த ஆண்டு (2025)புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இஸ்லாமியர்களின் ஐந்தாவது புனித கடமையான ஹஜ் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் இத்தகய செயல்பாடுகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. 

உடனடியாக பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் செய்சங்கர் ஆகியோர் இதுகுறித்து சவுதி அரசாங்கத்திடம் பேசி 52 ஆயிரம் இந்தியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய ஜமாத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement