advertisement

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைமை: சுதாகர் ரெட்டி பேட்டி..!

ஜூலை 26, 2025 6:06 முற்பகல் |


 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது:  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மேலும்  தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து அதிகளவில் உள்ளது. 2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று சட்டம் - ஒழுங்கை சரி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியின் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும்,அவரது தலைமையில்தான் 2026 தேர்தலை அதிமுக - பாஜக கூட்டணி சந்திக்கிறது என்றும்  அறிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்துக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். அவரது எழுச்சி பயணத்துக்கு பிரதமர் மோடியின் ஆசியும், வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement