advertisement

விருதுநகரில்  இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஜூலை 26, 2025 10:01 முற்பகல் |

 

விருதுநகரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கை. 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமை தாங்கினார்.


2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக கூறப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

"களைந்திடுக, களைந்திடுக ஊதிய முரண்பாட்டை களைந்திடுக", "ஊதிய உயர்வு கேட்கவில்லை, உரிய ஊதியம் கேட்கிறோம்", "ஒன்றா ஒன்றா கற்பிப்பவரும், கடை நிலை ஊழியரும் ஒன்றா" போன்ற பதாகைகளை ஆசிரியர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement