advertisement

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறையில் வேலை; விண்ணப்பிக்க அழைப்பு

ஜூலை 24, 2025 11:56 முற்பகல் |

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு அரசு துறையில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக செவிலியர், நகர சுகாதார செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரபப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம்.

மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் புதுக்கோட்டை மாநகராட்சி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் நலப்பணிகள், அறந்தாங்கி சுகாதார மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 129 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
கல்வித்தகுதி
ஒப்பந்த செவிலியர் பதவிக்கு DGNM அல்லது இளங்கலை நர்சிங் பட்டப்படிப்பு (B.Sc Nursing) முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு நரசிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திருந்தால் அதற்கான முன் அனுபவச் சான்று பெற்று விண்ணப்பிக்கலாம்.நகர சுகாதார செவிலியர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ANM படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மருந்தாளுநர் பதவிக்கு அரசு அங்கீகரிக்க கல்வி நிறுவனத்தில் D.Pharm / B.Pharm படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆய்வக நுட்புனர் பதவிக்கு 1 ஆண்டு C.M.L.T படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்றிதழ் உரிய அலுவலரிடம் பெற்று இணைக்கப்பட வேண்டும்.இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு DGNM அல்லது நர்சிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கொரோனா காலத்தில் பணி செய்தவர்கள் அனுபவ சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

சம்பள விவரம் ஒப்பந்த செவிலியர் பதவிக்கு ரூ.18,000 வழங்கப்படும்.
நகர சுகாதார செவிலியர் பதவிக்கு ரூ.14,000, மருந்தாளுநர் பதவிக்கு ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும்.ஆய்வக நுட்புனர் பதவிக்கு ரூ.13,000, மருத்துவமனை பணியாளர் பதவிக்கு ரூ.8,500 வழங்கப்படும்.இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.18,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால், விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து நேர்காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருத்துவத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pudukkottai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். பணி கோரும் விண்ணப்பங்கள் ஜூலை 31-ம் தேட்தி மாலை 5.45 மணி வரை பெறப்படும்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement