திருநெல்வேலியில் சாலையோர உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் சாலையோர உணவு வணிகர்களுக்கு மருத்துவ முகாம், உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி, கலப்படத்தை கண்டறியும் முறைகள், செறிவூட்டப்பட்ட உணவு மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ரோஸ் மஹால், கொக்கிர குளம், திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது.
இம் முகாமில் சாலையோர உணவு விற்பனையாளர்கள் சுமாராக 121 நபர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சர்க்கரை அளவு, எடையளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு அடுத்தபடியாக, பாதுகாப்பாக சாலையோர வியாபாரிகள் உணவினை எப்படி கையாள்வது, தனிநபர் சுகாதாரம் எவ்வாறு பேணுவது, கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது, செறிவூட்டப்பட்ட உணவினை உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகள், சமையல் எண்ணெயினை அடிக்கடி சூடு படுத்துவதினால் ஏற்படும் உடல் உபாதைகள் போன்றவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமினை மாநகர நல அலுவலர் மருத்துவர். ராணி, உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். சசி தீபா ஏற்பாடு செய்திருந்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன் மற்றும் பயிற்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிர்தவுஸ், சிவசுப்பிரமணியன், அருண், அக்க்ஷயா ஆகியோர் பங்கேற்றனர். முகாமின் முடிவில் பாதுகாப்பான முறையில் சாலையோர உணவு வியாபாரிகள் பொது மக்களுக்கு உணவினை வழங்குவோம் என்று உறுதியளித்தனர்.
கருத்துக்கள்