advertisement

தூத்துக்குடி மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள்

அக். 24, 2025 6:03 முற்பகல் |

 

தூத்துக்குடியில் மழை குறைந்ததின் காரணமாக 4 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று சுழற்சி முறையில் சுமார் 109 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement