வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த திமுக கடிதம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய இடங்களில் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழக டிஜிபிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நாளை வாக்கு எண்ணிக்கையை சீர்குலைத்து, சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட பாஜகவும், சில கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இதனை முறியடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜகவின் பி-டீமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்