மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்; விஜய்
பிப். 02, 2026 7:01 முற்பகல் |
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.விழாவில் விஜய் பேசியதாவது,
தமிநாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்துள்ளோம். தமிழக மக்களின் கண்ணீரை துடைக்க தொடங்கப்பட்ட இயக்கம்தான் தவெக. உங்களை நம்பிதான் கட்சியை தொடங்கியுள்ளேன்.
காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இவர்கள் இருக்கிறார்களே என்று மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். 2017, 2021க்கு பிறகு தமிழ்நாட்டை பற்றி மக்கள் யோசித்து பார்க்கின்றனர். மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர். திமுகவை வீழ்த்த மக்கள் சக்தியான தவெக-வால் மட்டுமே முடியும்





கருத்துக்கள்