advertisement

அநீதி அராஜகம்....– புது திருக்குறள் கூறி திமுக-வை விமர்சித்த விஜய்……!

பிப். 02, 2026 8:14 முற்பகல் |


 
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது ,தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜூன் மாதம் அளித்த பேட்டி ஒன்றில், பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தேன். அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சிதான் அதிமுக என்று கூறினார்.

1977-ம் ஆண்டு போல பழைய நஞ்சு போன தீஞ்சு போன ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும். ”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு”. மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement