ராமநாதபுரம் : அரசு அலுவலர்கள் சார்பில் பொங்கல் விழா- ஆட்சியர் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அலுவலர்கள் , பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டினார்.
தொடர்ந்து , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்துறை மூலம் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமிழ்நாடு முதலமைச்சரால் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பொங்கல் வாழ்த்து மடல் கடிதம் அனுப்பி வைத்ததை மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் , ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் , மகளிர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்