பரமக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம்
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது .
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் , முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப்அலிகான் உத்தரவின் படி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 426 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 2,87,02,524/= (இரண்டு கோடியே என்பது ஏழு லட்சத்து இரண்டாயிரத்து ஐநூறு இருபத்து நான்கு) அறிவிக்கப்பட்டது.
இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன் , சார்பு நீதிபதி அறிவு தலைமை தாங்கினர். குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலை வகித்தார். அமர்வு வழக்கறிஞர்கள் திருமூர்த்தி , கோபால் பாண்டி கலந்து கொண்டனர். மூத்த இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாட்டினை வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் முத்து விஜயன் , சட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.






கருத்துக்கள்