அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
திருபுவனம் அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 25 லட்சம் வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள மடபுரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக வேலை செய்து வந்தனர் அஜித்குமார். இவருக்கு வயது 28. இந்த நிலையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி அன்று மதுரையை சேர்ந்த பெண் நிகிதா என்பவர் கோவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் வைக்கப்பட்டு இருந்த நகை காணமால் போனாத கூறி திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணையின் பெயரில் காவலாளி அஜித் குமாரை அழைத்து சென்றனர். காவல்துறையின் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
அப்போது தமிழகத்தில், இதுவரை 24 மரணங்கள் நடந்துள்ளதாகவும் குற்றவாளியை அடிக்க யார் உங்களுக்கு உரிமை கொடுத்தது. வழக்கு பதிவு செய்யாமல் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் கோசாலைக்கு எப்படி அழைத்துச் செல்ல முடியும் என்று காவல்துறையினரை கேள்விகளால் துலைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து அஜித் குமாரை தாக்கிய 5 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு சார்ப்பில் நிவாரணமாக அஜித்குமார் தம்பிக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி முதல் அஜித்குமாரின் மரண வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிஐ விசாரணையில் அஜித்குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் நம்பர் பிளேட் போலி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்த வீடியோக்களை சிபிஐ அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.இந்த நிலையில், அஜித் குமார் கொலை வழக்கில் இடைக்கால இழப்பீடாக ரூபாய் 25 லட்சம் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு ள்ளது. மேலும் கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும் அஜித் குமார் மரண வழக்கில் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும் அனைத்து ஒத்துழைப்பு தருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்