advertisement

தூத்துக்குடியில் பூட்டிய அறைக்குள் சிக்கிய  சிறுவன் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

மே 30, 2025 3:35 முற்பகல் |

!
 
தூத்துக்குடி கே.வி.கே. நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் தாதா பீர்.  அவர் பணிக்கு சென்ற நிலையில், வீட்டில் அவரது மனைவி, மற்றும் 03-வயது மகன் இருந்துள்ளனர். அப்போது மனைவி வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில், சிறுவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.

வீட்டின் உள்அறைக்குள் சென்ற விளையாடிய சிறுவன் கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக பிறகு அந்த சிறுவனால் கதவை திறக்க முடியவில்லை. கதை திறக்க முடியாததால் சிறுவன் பயத்தில் அறைக்குள் இருந்து கதறி அழுது உள்ளான். அவனது அழுகுரல் கேட்ட தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்க முயற்சித்துள்ளனர்.  

ஆனால், அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன சிறுவனின் தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள்  விரைந்து வந்து அந்த வீட்டின் உல் உள்ள அறையின் கதவை  உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement