தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கனை பெற்றுக் கொண்டார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (18.11.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 28 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை ஆட்சியர் இளம்பகவத் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்