அப்துல்கலாம் நினைவகத்தில் ராமநாதபுரம் கலெக்டர் மரியாதை
ஜூலை 27, 2026 9:44 முற்பகல் |
பேய்க்கரும்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவகம் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டம், பேய்க்கரும்பில் அமைந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அன்னாரது தேசிய நினைவகத்தில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்