advertisement

சிறுவன் செய்த செயலில் நெகிழ்ந்த ராணுவம்: நினைவு பரிசு கொடுத்து கெளரவம்..!

மே 29, 2025 3:50 முற்பகல் |

 

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நமது இராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாட்டை காத்த வீரர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக சிறுவன் ஒருவன் தண்ணீர், பால், லஸ்சி கொடுத்து உதவியுள்ளான். இதற்கு ராணுவ உயர் அதிகாரி ஒருவர்  நினைவுப்பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார்.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையில், நமது ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு, அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கினர்.

அப்போது, பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் மாவட்டத்தின் தாரா வாலி என்ற கிராமத்திலும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அதனை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த ஷ்ரவன் சிங் என்ற 10 வயது சிறுவனுக்கு, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதோடு, அந்தச் சிறுவனுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வமும் இருந்துள்ளது. 

இதனால், வீரர்களுக்கு பயப்படாமல் அவர்கள் அருகில் சென்ற சிறுவன், அவர்களுக்கு பால் , லஸ்சி, தண்ணீர் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளான்.  அதனை வீரர்களும் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்ட்டுள்ளனர். குறித்த சிறுவன் இதனை ஒரு நாள் மட்டும் செய்யாமல் தொடர்ந்து செய்து வந்துள்ளான். 

இதனையறிந்த ராணுவத்தின் காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் மன்ரல் சிறுவனை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு அந்த சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கியதுடன், விருந்து அளித்து கவுரவித்துள்ளார். அத்துடன், சிறுவனுக்கு விருப்பமான ஐஸ்கிரீமையும் வழங்கி பாராட்டும்  தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement