advertisement

சென்னை : சாக்கு மூட்டையில் வடமாநில இளைஞர் சடலம்

ஜன. 27, 2026 8:16 முற்பகல் |

 

சென்னை: அடையாறு பகு​தி​யில் சாக்கு மூட்​டை​யில் வடமாநில இளைஞரின் சடலம் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்னை அடை​யார், இந்​திரா நகரில் பிரபல​மான பைக் ஷோரூம் ஒன்று உள்​ளது. இதன் அரு​கில் நேற்று காலை 7.30 மணி​யள​வில் சாக்கு மூட்டை  ஒன்று கேட்​பாரற்ற நிலை​யில் கிடந்​தது. இதை பார்த்த அப்​பகுதி மக்​கள் அரு​கில் சென்று பார்த்​த​போது அதிலிருந்து ரத்​தம் வடிந்து கொண்​டிருந்​தது. இதுகுறித்து அவர்​கள் உடனடி​யாக போலீ​ஸில் புகார் தெரி​வித்​தனர்.

அடையாறு போலீ​ஸார் வந்து சாக்கு மூட்​டையை அவிழ்த்து பார்த்​த​போது தலை​யில் 3 வெட்​டுக் காயங்​கள் மற்​றும் முகத்​தில் கையால் அடித்த சிறு ரத்​தக் காயத்​துடன் 35 வயதுடைய வட மாநில இளைஞர் ஒரு​வரின் சடலம் அதில் இருந்​தது.இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement