மனிதநேய வார விழா"
ஜன. 27, 2026 11:19 முற்பகல் |
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த கருத்தரங்கம் நாகர்கோவில் மாநகராட்சி 33- வது வார்டு குருசடி புனித அந்தோணியார் சமூக நலக்கூடத்தில் வைத்து குமரிமாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் M.சிவசங்கரன் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் மோகனா , அரசு சிறப்பு வழக்கறிஞர். ஸ்ரீனிவாசன் ,MET பொறியியல் கல்லூரி நிறுவனர் முகமது இக்கிம் , புள்ளியியல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் , வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மரிய ஸ்டீபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்




கருத்துக்கள்