advertisement

குற்றால அருவிகளில் 5-வது நாளாக குளிக்க தடை

மே 29, 2025 6:32 முற்பகல் |

 

முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் குற்றலா அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியுற்று வந்தனர். இதனிடையே, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், கடந்த ஒரு வாரமாக அம்மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை அடித்து நொறுக்கி வருகிறது. அந்த வகையில், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருதால், குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த 4 தினங்களாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை தொடர்வதால், 4வது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் குளிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement