தூத்துக்குடியில் தீ விபத்து: லாரி, பைக்குகள் எரிந்து நாசம்!
மே 29, 2025 3:15 முற்பகல் |
தூத்துக்குடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லாரி, சரக்கு வாகனம் மற்றும் 15 டன் தக்காளி எரிந்து சேதம் ஆனது.
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் பேரின்ப லிங்கம். இவர் திரவியரத்தின நகர், மடத்தூர் மெயின் ரோட்டில் சொந்தமான கடையில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர்.
எனினும் தீவிபத்தில் ஒரு லாரி, டாடா ஏஸ் வாகனம், 2 பைக்குகள் மற்றும் 2 டன் வெங்காயம், 15 டன் தக்காளி ஆகியவை எரிந்து சேதமானது. மேலும், 1 ஆடு 2 நாய்க்குட்டிகள் தீவிபத்தில் உயிரிழந்தன. தீவிபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்