advertisement

தூத்துக்குடி காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

மே 29, 2025 3:21 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி  நேற்று ( மே 28)  நடைபெற்ற முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த, 4 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 74 மனுதாரர்கள் என மொத்தம் 78 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement