advertisement

பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைத்திட மானியம்: தூத்துக்குடி ஆட்சியர் தகவல்!!

மே 29, 2025 3:29 முற்பகல் |


 
தொழில் முனைவோர்களை ஊக்குவித்து மீன்வளம் சார்ந்த தொழிலில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது  என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து மீன்வளம் சார்ந்த தொழிலில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைத்திட மானியம் வழங்குகிறது. 50 டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி நிலையம் அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.150 இலட்சம், 30 டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி நிலையம் அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ. 120 இலட்சம் மற்றும் 20 டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி நிலையம் அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.80 இலட்சம் செலவினத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர் - ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியத் தொகையானது பனிக்கட்டி நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் வழங்கப்படுகிறது. 

மேலும், ஒருங்கிணைந்த வண்ணமீன் வளர்ப்பு அலகு செலவினத்தொகை ரூ.30 இலட்சத்தில் பொதுப்பிரிவு மானியத்தொகை 40 சதவீதம் வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டங்களின் கீழ் பயனடைய விருப்பமுள்ள நபர்கள் உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வடக்கு கடற்கரை சாலை, மீன்வளத்துறை வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் வார வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461- 2320458 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என  தெரிவித்துள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement