advertisement

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

மே 29, 2025 5:34 முற்பகல் |

 


தூத்துக்குடி வஉசி., துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடியில் இன்று ( மே 29)  அதிகாலை நிலக்கரி ஏற்றி வந்த  டிப்பர் லாரி டிரைவரின் கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து வஉசி துறைமுக ஆணையத்தின் தீயணைப்பு படை நிலைய அதிகாரி பாட்ஷா தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த டிரைவர், கிளீனர் ஆகிய இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement