advertisement

விடுமுறை தினம்- திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஜன. 26, 2026 2:56 முற்பகல் |

 


திருச்செந்தூர் முருகன் கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று (ஜன 25) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதில் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூருக்கு பக்தர்கள் அதிகளவில் வாகனங்கள் வந்திருந்த காரணத்தால் பேருந்து நிலையம், தெப்பக்குளம் பகுதி, ரத வீதிகளிலும், மக்கள் தலையாக காட்சி அளித்தது. மேலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement