advertisement

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

ஜன. 27, 2026 4:42 முற்பகல் |

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பஜார் அடுத்த பேயன்விளை பள்ளி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 3 பேர் அந்த வழியாக வந்த சிறுவர்கள் உள்பட சிலருக்கு ரகசியமாக எதையோ விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர்.

உடனே அங்கு சென்ற போலீசார், அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருச்செந்தூர் அம்மன் புரம் அருகே ஜெபராஜ் கிறிஸ்டோபர் (60), குரும்பூர் மேலபுதுகுடி தெற்கு தெருவை சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் மகன் அருண் (38), காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (43) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து  விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 14 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement